துடிதுடித்து இறந்த பசுக்கள் ! பதறவைத்த சம்பவம்- வீடியோ
  • 6 years ago
பசுக்களூக்கு வைக்கப்பட்ட தண்ணீரில் மர்மநபர்கள் நஞ்சு கலந்ததால் 4 பசுக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

வேலூர் காந்திநகர் கல்லேரி பகுதியை சேர்ந்தவர் லலிதாம்மாள் இவர் 4 பசுக்களை வைத்து அதன் மூலம் வரும் வருவாயில் குடும்பம் நடத்தி வருகிறார் இந்த நிலையில் மேய்ச்சலுக்கு மாட்டை அழைத்து சென்ற லலிதாம்மாள் மீண்டும் மாட்டை வீட்டிற்கு அழைத்து வந்து மாட்டிற்கு கழிநீர் தண்ணியை கொடுத்துள்ளார் மாடுகள் அந்த தீவன நீரை பருகியவுடன் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்தது இதில் 2பசுக்கள் மற்றும் 2 சினை பசுக்கள் என மொத்தம் 4 பசுமாடுகள் பரிதாபமாக பலியானது இதனை பார்த்த மாட்டின் உரிமையாளர் லலிதாம்மாள் செய்வதரியாது கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது மேலும் பாதிக்கப்பட்ட லலிதாம்மாள் யாரோ மாடுகளை வேண்டுமென்றே தண்ணீரில் நஞ்சு கலந்து மாடுகளை கொன்றது குறித்து லலிதாம்மாள் குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended