எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை!- வீடியோ
  • 6 years ago
ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில், எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன் பிரபல ரவுடியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரவுடி மோகன் தனது வீட்டிலிருந்து பழைய பேருந்து நிலையம் வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது குகைபாலம் என்ற பகுதியில் மோகனை ரவுடி சிலர் வழிமறித்து வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். கொலை தொடர்பாக சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் பிரபல ரவுடிகளான முரளி, கார்த்தி, மூர்த்தி, சண்முகபாண்டியன், ஆறுமூகம், வெங்கடேஷ், செல்வன், மேட்டூர் ரகு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி எழில் எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு விதித்தார்
Recommended