மத்திய சிறையில் கைதி தற்கொலை- வீடியோ

  • 6 years ago
மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி கழிவறையில் லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

வேலூர்மாவட்டம்,ஆற்காட்டை சேர்ந்தவர் கஜேந்திரன் இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இருந்தார் பரோலில் சென்ற இவர் திடீரென தலைமறைவான நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டு கஜேந்திரன் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் இந்த நிலையில் வேலூர் சிறையில் கழிவறையில் தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் விடியற்காலை நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து சிறைகைதிகள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சிறைக்கைதி சிறையுள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Category

🗞
News

Recommended