Skip to playerSkip to main content
  • 8 years ago
அதிமுகவை இணைக்க 60 நாள் கெடு கொடுத்த தினகரன் கட்சியை இணைக்கவில்லை என்றால் வீட்டிற்கு வந்து சட்டையை பிடித்து உதைப்பேன் என்று தினகரன் கூறியதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்

திருச்சியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய மின்சார துறை அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை பார்பதற்கு சசிகலாவும் தினகரனும் அனுமதிக்கவில்லை என்றார் . தகுதி நீக்கம் செய்யபட்ட 18 எம் எல் ஏக்களை இது நாள் வரை தினகரன் ஏமாற்றி பொய் சொல்லி தன்னுடன் வைத்திருந்ததாகவும் விரையில் 18 பேரும் அதிமுகவில் இணைவார்கள் என்றார் . தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவை இணைக்க 60 நாள் கெடு கொடுத்த தினகரன் கட்சியை இணைக்கவில்லை என்றால் வீட்டிற்கு வந்து சட்டையை பிடித்து உதைப்பேன் என்று தினகரன் கூறியதாகவும் தெரிவித்தார்

Category

🗞
News

Recommended