மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது ஈ.ஆர்.ஈஸ்வரன் புகார்- வீடியோ

  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டாலும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் இன்னும் கொதிப்பில்தான் இருக்கிறார்கள். ' இத்தனை பிரச்சினைகளுக்கும் தொழிற்சாலை மூடப்பட்டதற்கும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான்' எனக் கொதிக்கிறார் கொங்கு ஈஸ்வரன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரம் உற்பத்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

Protest is not yet Over Says Eshwaran. KMDK General Secretary Eshwaran says that,Pollution control board is the reason behind all protests in TN.

Recommended