Skip to playerSkip to main content
  • 8 years ago
தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்றும் காவிரிக்காக கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை இழுத்து மூடுவோம் என்றும் இயக்குநர்கள் அமீர் மற்றும் கவுதமன் ஆகியோர் தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த போட்டிகளை வேறு மாநிலத்துக்கு இடம் மாற்ற கோரியும் அதை தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துவிட்டது. காவிரிக்காக தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் அவசியமா என்ற கேள்வியையும் போராட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர்.



Tamil Cinema Directors meets media and opposes for IPL matches in Chennai and also they opposes for appointment of Anna University Vice Chancellor Surappa.

Category

🗞
News

Recommended