ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, செல்போனுடன் இணைக்க மார்ச் 31 கடைசி நாள் என்று மத்திய அரசு சொன்னாலும் சொன்னது வங்கிகளின் மெசேஜ்கள் நாள்தோறும் மக்களை டார்ச்சர் செய்து வந்தது. அதற்கு உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாட்டில் உள்ள குடிமகன் ஒவ்வொருவருக்கும் தனியான அடையாள எண் என்று முதன்முதலில் ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
தனி நபரின் அங்க அடையாளங்களான கைரேகைப் பதிவு, கண்விழிப்படலம் பதிவு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒரு அடையாள அட்டையாகத் தான் ஆதார் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
Big relief to customers from the cellphone and banks alert messages for linking aadhaar mandatory within March 31st, as SC says indefinite time limit for linking it.