குரங்கணி காட்டில் கருகிய புது மணப்பெண் புனிதா- வீடியோ
  • 6 years ago
குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த புனிதாவும் காட்டுத்தீயில் சிக்கி கருகியவர்தான். திருமணமாக 44 நாட்களே ஆன நிலையில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பலியாகியுள்ளார் புனிதா. செங்கல்பட்டு ஜேசிகே நகர் தாழம்பூ தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மனைவி மணிமொழி. இவர்களுக்கு புனிதா,25 என்ற மகளும், கவுதம் என்ற மகனும் உள்ளனர். கவுதம் கல்லூரியில் படித்து வருகிறார். புனிதா வேளச்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்தார். கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி தான் புனிதாவுக்கும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடந்தது. பாலாஜியும் மென்பொறியாளராக உள்ளார்.
Recommended