Skip to playerSkip to main content
  • 8 years ago
சொகுசுகாரும் 3 இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி உட்பட 4பேர் பலியாகினர்

கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த சொகுசு கார் தாராபுரம் அடுத்த ருத்தராவதி அருகே வந்து கொண்டிருந்தபோது அந்தவழியக மோட்டார் சைக்கிள் வந்த முதியவர் ஒருவர் காரின் மீதுமோதியனார் இதனால் காரை ஓட்டிவந்த நபர் காரை பிரேக்கடித்த பொழுது அதே வழியில் வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் பைக்குகள் திடீரென நிறுத்தபட்ட காரால் பைக்கை கட்டுபடுத்த முடியாத நிலையில் காரின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் வந்த நான்குபேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் இவ்விபத்தில் பலியான நான்கு பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளது. மேலும் நான்கு பேர் பலியான இவ்விபத்தில் உயிரிலந்த கணவன் மனைவி யார் எந்த ஊரை சேர்நவர்கள் என எந்த தகவலும் கிடைக்காத நிலையில் குண்டடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதேபோல் தேனி ஆண்டிபட்டி அருகே மருத்துவமாணவிகள் ஓட்டிசென்ற கார் ஆட்டோ மீது மோதியதில் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த கடமலைகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிண்றனர்.

Category

🗞
News

Recommended