பிரதமர் மோடியின் பெயருக்கு முன் 'ஸ்ரீ' என்ற வார்த்தையை பயன்படுத்தாததால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா வங்கதேச எல்லையில் மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சஞ்சீவ் குமார் என்ற வீரருக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ராணுவத்தில் இருக்கிறார். எல்லையை பாதுகாப்பு இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு படையில் இவர் பணியாற்றுகிறார். இவரது உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்.
இந்த பாதுகாப்பு படை விதிப்படி தினமும் காலை பரேடில் சில விஷயங்கள் கேட்கப்படும். பொதுவாக அவர்கள் இருக்கும் படை குறித்த கேள்விகள் கேட்கப்படும். அதேபோல் சஞ்சீவ் குமாரிடம் அவரது படையின் தலைவர் அனுப் லால் பகத் சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
Indian Army man punished for not using SRI in Modi name in Kolkatta. He got 7 days salary cut punishment by army officials.