ஜெ.விடமிருந்து ரகசியமாக சொத்துக்களை அபகரித்த மன்னார்குடி கும்பல் ! அமைச்சர் வீரமணி-வீடியோ
  • 6 years ago
ஜெயலலிதாவிடம் ரகசியமாக கையெழுத்துவாங்கி அவரின் சொத்துக்களை எல்லாம் மன்னார்குடி மாபியா கும்பல் அபகரித்துகொண்டது என்றுஅமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூரில் ஜெயலலிதாவின் 7௦ ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு பேசினார் அப்போது ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மன்னார்குடி மாபியா கும்பல் ஜெயலலிதாவின் கைநாட்டை ரகசியமாக வாங்கி ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரித்து கொண்டு தற்போது அந்த பணத்திலே கழகத்தில் ஒற்றுமையாக உள்ள தொண்டர்களை பிரித்து வருகின்றனர் என்றும் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை நடந்து வருகிறது அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எப்படி இறந்தார் அல்லது சாகடிக்கப்பட்டாரா என்பது விரைவில் தெரியவரும் என்றும் தெரிவித்தார்

Recommended