திருநங்கைகளுக்கு மறுக்கப்படும் விமான பணிப்பெண் வாய்ப்பு
  • 6 years ago
தொடர்ந்து முயற்சித்தும் திறமை மற்றும் முன் அனுபவம் இருந்தும் விமான பணிப்பெண் வாய்ப்பு மறுக்கப்படுவதால் தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஷானவி குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாழ வழியில்லை என்பதாலும் தன் மீது மத்திய அரசும், ஏர் இந்தியாவும் கருணை காட்டாத நிலையிலேயே விரக்தியோடு இந்த வேண்டுகோளை முன் வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் 26 வயது திருநங்கை ஷானவி பொன்னுசாமி. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 2010-ம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார் இந்த ஷானவி.

TN's trans woman requests to President for mercy killing as she has talent and experience but rejected jod because of her 3rd gender reason, she frusturated and said there is no way hereafter for her survival.
Recommended