லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது- வீடியோ

  • 6 years ago
வேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(41). சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் உள்ளது. மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணல் வியாபாரம் செய்ய முடியவில்லை.

ஆனால் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் டிஎஸ்பி தன்ராஜ் பன்னீர் செல்வத்தை நிர்பந்தப்படுத்தியுள்ளார்.

மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டியதால் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை பேசி முடிக்க ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.

பிடிபட்ட மணல் லாரியை விடுவிக்க லஞ்சப் பணத்துடன் பொங்கல் போனஸையும் சேர்த்து வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஆம்பூர் டிஎஸ்பியும், உதவி ஆய்வாளர் ஒருவரும் கையும் களவுமாக சிக்கினர்.

வேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(41). சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் உள்ளது. மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணல் வியாபாரம் செய்ய முடியவில்லை.

ஆனால் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் டிஎஸ்பி தன்ராஜ் பன்னீர் செல்வத்தை நிர்பந்தப்படுத்தியுள்ளார்.

மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டியதால் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை பேசி முடிக்க ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.

DSP demands bribe for sand mining, arrested

Recommended