நடுத்தர வர்க்கத்தை டீலில் விட்ட மத்திய அரசு..பின்னணி என்ன?- வீடியோ

  • 6 years ago
பாஜகவின் வாக்கு வங்கி என கருதப்பட்ட நடுத்தர மக்களையும், மேல் நடுத்தர வர்க்கத்து மக்களையும் 'டீலில்' விட்டுள்ளநிலையில், ஏழைகள் மீதும், விவசாயிகள் மீதும் பாசத்தை பொழிந்துள்ளது, அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட். 8 மாநில தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா, பொதுத் தேர்தலை மையப்படுத்திப் பட்ஜெட் அறிக்கையில், அதிகளவில் விவசாயத் துறையின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2018-19ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை கட்டமைப்புக்கு 2,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் விவசாயத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் 1.5 மடங்கு வரை நிச்சயமாக உயரும் என அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


If the frequency of words used by the finance minister Arun Jaitleyis any indication about the priorities of the Narendra Modi government, farmers - who also constitute the largest chunk of voters - top the list.

Recommended