கள்ள காதலன் கல்தா... காதலி விஷ ஊசி போட்டு தற்கொலை..வீடியோ
  • 6 years ago
கள்ள காதலனுக்கு திருமணம் நடைபெற்றதால் மனமுடைந்த காதலி தனது இரு மகன்களுக்கும் விஷ ஊசி போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு சம்பத் நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி ஸ்ரீஜா. தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். ரவீந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். பரணித் சஜீஸ் ஆகிய இரு மகன்களுடன் தனியே வாழ்ந்து வந்த ஸ்ரீஜாவிற்கும் அப்பகுதியை சேர்ந்த திருமணமாகாத இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்துள்ளது. ஸ்ரீஜாவையே திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை காட்டிய இளைஞர் திடீரென்று தன் குடும்பத்தினர் பார்த்த பெண்ணுக்கு நேற்று தாலி கட்டியுள்ளார். கள்ள காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் மனமுடைந்த ஸ்ரீஜா என்ன செய்வதென்று தெரியாமல் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் உள்ள மெடிக்கலில் விஷ ஊசி வாங்கி வந்து தன் இருமகன்களும் போட்டு கொலை செய்ததுடன் தானும் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended