Skip to playerSkip to main content
  • 8 years ago
சட்டசபையில் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என இன்று அறிவிக்கப்பட்டது. சட்டசபை செயலாளர் க.பூபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வம் கை சட்டசபையில் ஓங்கியுள்ளது. ஆனால், சுயேச்சை உறுப்பினர் தினகரனுடன் அவ்வப்போது நேருக்கு நேர் வாதம் செய்ய வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் வந்துள்ளார். வரும் 8ம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடர் களைகட்டப்போவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

முன்னவர் பதவி என்பது மிக முக்கியமானது. அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தகுதியுள்ள நபர் முன்னவர். எந்த துறையை சேர்ந்த குற்றச்சாட்டு, விமர்சனம், கேள்வியாக இருந்தாலும் முன்னவர் பதில் சொல்ல முடியும். சட்ட நுணுக்கங்கள், அவையின் மரபுகளை முன்னவர் பதவியில் உள்ளவர்கள் கரைத்து குடித்திருக்க வேண்டும். அவை விதிகளுக்கு மாறாக கேள்விகள் எழுந்தால் அப்போது குறுக்கிட்டு 'பாயிண்ட் ஆப் ஆர்டர்' கொண்டுவரும் தெளிவு பெற்றவராக முன்னவர் இருக்க வேண்டும். தவறாக நடப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழிவதும் இவரது பணி.

இதுபோன்ற பதவியில்தான் பன்னீர்செல்வம் அமர வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவி காலத்திலும் பன்னீர்செல்வம் இந்த பணியை ஓரளவு திறம்பட செய்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம், தனி அணி கண்டபோது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி, மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்த்ததோடு, முன்னவர் பதவி கொடுத்தார்.


OPS has to clash face-to-face with Independent MLA Dinakaran at Assembly, as he become Munnavar now.

Category

🗞
News

Recommended