Skip to playerSkip to main content
  • 8 years ago
ரஜினி ரசிகர் கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அதற்கு முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இருக்கும் தனது ரசிகர்களை மன்றத்தின் மூலம் ஒருங்கிணைக்கும்படி ரஜினி கேட்டுக்கொண்டு உள்ளார். இதற்கான பணிகள் துரித கதியில் நடக்கின்றன

ரஜினியின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் பல கட்சிகளிலும் இருந்து வந்த நிலையில், தனிக்கட்சி ஆரம்பிப்பதன் மூலம் பல்வேறு கட்சிகளின் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், ரஜினி ரசிகர்கள் திமுகவில் இருக்கலாம். ஆனால், எங்களை பொறுத்தவரை கொள்கை வேறு; சினிமா வேறு. என்பதை தொண்டர்கள் நன்கு அறிந்து உள்ளார்கள்.

DMK Cadres will not stick to Rajini Fans club anymore says Ma.Subramaniyan. He also added that There is no Loss for DMK with Rajini Political Entry.

Category

🗞
News

Recommended