ரஹானே தந்தை அதிரடி கைது- வீடியோ
  • 6 years ago
காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கில் கிரிக்கெட் வீரர் அஜிங்ய ரஹானே தந்தை மதுகர் பாபுராவ் கைது செய்யப்பட்டார். இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக செயல்படுபவர் ரஹானே. மும்பையை சேர்ந்த ரஹானே இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். ரஹானே தந்தை மதுகர் பாபுராவ் (54). இவர் விடுமுறையை கழிக்க தனது குடும்பத்துடன் சம்பவத்தன்று புனே-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை மதுகர்தான் ஓட்டியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையில் கங்கல் என்ற பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆஷாதய் என்ற 67 வயது மூதாட்டி மீது மோதியது. இதில் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார்.
மூதாட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால், மதுகர் பாபுராவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






India vice-captain Ajinkya Rahane's father, Madhukar Baburao Rahane, was arrested in Kolhapur on Friday.
Recommended