தொப்பியில் நிற்போம்..ஜெயிப்போம்.. இரட்டை இலையை மீட்போம் - தங்க தமிழ் செல்வன்- வீடியோ

  • 7 years ago
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றால் போட்டியிடுவது உறுதி என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் சசிகலா அணி இரட்டை இலைக்கு மோதியதால் சின்னத்தை முடக்கியது. 7 மாதங்களுக்குப் பின்னர் அதிமுக கட்சி, கொடி, சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADMK Disqualified MLA Thanga Tamilselvan has said that his faction will contest RK Nagar by election and win the poll too

Category

🗞
News

Recommended