Skip to playerSkip to main content
  • 12 years ago
தமிழனுக்கு தமிழனே துரோகி - முற்றி வழியும் தமிழ் பைத்தியம்!

உரை: செய்யத் இப்ராஹிம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழர்கள் மூவருக்கு தூக்கு ரத்து செய்யப்பட்டது உலகத் தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று தமிழ் பைத்தியம் பிடித்து; அது முத்திப்போய் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் இருக்கும் இனம், மொழி, ஊர், மாவட்டம், மதம் சார்ந்து அவரவர் பாதிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பதும் போராடுவதும் தவறல்ல; அவ்வாறு குரல் கொடுப்பது நியாயமாக இருக்க வேண்டும்; அப்படி குரல் கொடுப்பவர்கள் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் தற்போது இங்கு நிலை அப்படி இல்லை; தமிழர்கள் என்ன தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்தும் போக்கு நிலவுகின்றது. தமிழர்கள்; தமிழ் மக்கள் என்றுபேசி ராஜீவ் கொலையாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழ் போராளிகள் ராஜீவ் காந்தியோடு சேர்த்து குண்டு வைத்து கொல்லப்பட்ட 14 தமிழர்களை நிர்கதியாக விட்டுவிட்டனர். அந்த குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்ட ராஜ குரு என்ற இன்ஸ்பெக்டருடைய மனைவி, “எனது கணவனும் பச்சைத் தமிழர்தான்” குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்ட எனது கணவருக்கு ஆதரவாக இந்த தமிழ் போராளிகள் குரல் கொடுக்காதது ஏன் என்று கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

Category

🗞
News
Comments

Recommended