கெத்து காட்டிய மாணவர்கள்; நவ தானியங்களால் உருவான இராமநாதபுரம் அரண்மனை!

  • 2 years ago
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பழங்கள் மற்றும் நவதானியங்கள் தினம் ஹரிஷ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது, இங்கு பயிலும் மாணவர்கள் வைட்டமின் சத்துள்ள பழங்களை காட்சிப்படுத்தி இருந்தனர், இதனை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் பார்வையிட்டனர், அவர்களிடம் மாணவர்கள் ஒவ்வொரு பழத்தில் இருக்கக்கூடிய பயன்கள் மற்றும் சத்துக்கள் குறித்து விளக்கம் அளித்தனர், அதனைத் தொடர்ந்து பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் கட்டிய அரண்மனையின் புகழைப் போற்றும் வகையில் கம்பு, சோளம், கோதுமை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நவ தானியங்களால் மூன்று மணி நேரத்திற்குள் வடிவமைத்து அசத்தினர், இந்த அரண்மனை 16 அடி நீளமும் 14 அடி அகலமும் கொண்டதாகும். இவ்வாறு அசத்திய அப்பள்ளி மாணவர்களை முதல்வர் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்.

Recommended