திறக்கப்படுமா ஸ்டெர்லைட்! பீதியில் மக்கள்
  • 6 years ago
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஸ்டெர்லைட் அனைத்து ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் பல தீய சக்திகள் இணைந்து தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றன என்றும் தூத்துக்குடியில் பல்வேறு அந்நிய சக்திகளின் தூண்டுதல் காரணமாக போராட்டம் வன்முறையாக மாறி அப்பாவி மக்கள் 13பேர் பலியாக நேர்ந்துள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோனது. பல்லாயிரக்கணக்கானோர் அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். அரசு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறிப்பிட்டுள்ளனர் இதனால் ஆலை மீண்டும் திறக்கப்படுமா என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்

The incident that triggered the District Collector demanding action to resume the Thoothukudi Sterlite plant
Recommended