வரம்பு மீறும் போக்கை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும் - வைகோ
  • 6 years ago
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை மூலம் மிரட்டல் விடும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தை விடுவிக்க ஈடற்ற தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதி ஒளிவிளக்கின் வெளிச்சத்தை இந்திய நாட்டுக்கு வழங்கியது, தமிழகத்தில் வேர் ஊன்றியுள்ள திராவிட இயக்கம்தான்.

MDMK General Secretary Vaiko has condemened the TamilNadu Governor's statement on DMK Protest.
Recommended