25 அடிக்கு குழி தோண்டி வங்கி லாக்கரை உடைத்த கொள்ளையர்கள்- வீடியோ

  • 7 years ago
மும்பையில் இருக்கும் பேங்க் ஆப் பரோடாவில் நேற்று கொள்ளையர்கள் நூதனமான முறையில் கொள்ளையடித்து இருக்கின்றனர். நான்கில் இருந்து ஐந்து பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சினிமாவில் நடப்பதை போலவே சுரங்க பாதை தோண்டி இந்த கொள்ளை நடந்து இருக்கிறது. மேலும் இதற்கு பெரிய அளவில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. போலீசார் இது குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

நவி மும்பையில் இருக்கும் 'ஜூனி நகர்' பேங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பெரிய அளவில் கொள்ளை நடந்து இருக்கிறது. திங்கள் கிழமை காலை வந்து பிறகே கொள்ளை நடந்த விஷயம் பணியாளர்களுக்கு தெரிந்தது. வங்கியில் லாக்கர் இருக்கும் தரை பகுதி சுரங்கம் போல தோண்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 30க்கும் அதிகமா லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.

Thieves loot 30 lockers in Bank of Baroda and took Rs. 40 Lakh from it. This robbery took place at Navi Mumbai branch of Bank of Baroda.

Recommended