நான் கொலை செய்யவில்லை.. சிபிஐ என்னை மிரட்டியது..டெல்லி பள்ளி மாணவன் பல்டி- வீடியோ

  • 6 years ago
இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர். தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என கூறப்பட்டது. அந்த மாணவன் தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டான்.

ஆனால் தற்போது அந்த கொலையை நான் செய்யவில்லை என சிபிஐ சிறப்பு அதிகாரிகளிடம் அவன் மாற்றி கூறி இருக்கிறான். இதனால் சிபிஐக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர். முதலில் அந்த பள்ளியின் கண்டெக்டர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

In a complete u-turn the juvenile has retracted his statement given to the CBI in connection with the Ryan murder case. He told a team of CBI officials and a legal cum probation officer of the district child protection unit that he was forced to make the confession

Recommended