கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை மாவட்ட நீதிமன்றம்-வீடியோ

  • 7 years ago
கந்துவட்டி கொடுமை குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அண்மையில் கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் 4 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கந்துவட்டி கொடுமை குறித்து பலமுறை இசக்கி முத்து புகார் அளித்தும் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நெல்லை ஆட்சியரின் புகாரின் பேரில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்

Cartoonist bala gets bail

Recommended